சிறுபஞ்சமூலம்

    நூல்குறிப்பு

  1. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
  2. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
  3. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  4. ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
  5. அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
  6. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  7. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
  8. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் உள்ளன.
  9. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது..
  10. காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
  11. மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
  12. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
  13. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
  14. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    சொற்பொருள்

  1. மூவாது - முதுமை அடையாமல்
  2. நாறுவ - முளைப்ப
  3. தாவா - கெடாதிருத்தல்
  4. கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  5. எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு
  6. வனப்பு - அழகு
  7. கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
  8. வாட்டான் - வருத்த மாட்டான்