NEW TAMIL BOOK 6.1 (page no : 2)
- தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
- தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
- தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
- தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
- தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
- தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
- தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
- தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
- தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
- தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
- தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- - பாரதிதாசன்
NEW TAMIL BOOK 2024 6.1 (page no : 3)
- தமிழே உயிரே வணக்கம்
- தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
- அமிழ்தே நீ இல்லை என்றால்
- அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
- தமிழே உன்னை நினைக்கும்
- தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
- – காசி ஆனந்தன்
NEW TAMIL BOOK 2024 6.1 (page no : 5)
- கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
- கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
- எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
- எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
- ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
- ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
- ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
- அழியாமலே நிலை நின்றதுவாம்!
- பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
- பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
- மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
- மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!
- - பெருஞ்சித்திரனார்
NEW TAMIL BOOK 2024 6.1 (page no : 6)
- வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
- மண் தோன்றி மழை தோன்றி மலைகள்
- தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
- ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
- தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
- செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
- - வாணிதாசன்
NEW TAMIL BOOK 6.1 2024 (page no : 8 , 9)
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
- இனிதாவது எங்கும் காணோம்
- - பாரதியார்
- என்று பிறந்தவள் என்று உணராத
- இயல்பினளாம் எங்கள் தாய்!
- - பாரதியார்
- தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
- - தொல்காப்பியம் : 386
- இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
- இதுநீ கருதினை ஆயின்
- - சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம் : 165
- தமிழன் கண்டாய்
- - அப்பர் தேவாரம் , திருத்தாண்டகம் : 23
NEW TAMIL BOOK 6.1 2024 (page no : 13)
- நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
- வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
- அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
- எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
- உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!
- சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
- பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
- – அறிவுமதி
NEW TAMIL BOOK 6.1 2024 (page no : 16)
- நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.
- - தொல்காப்பியம்
- கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி....
- -கார்நாற்பது
- நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.
- – பதிற்றுப்பத்து
- கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
- நரம்பின் முடிமுதிர் பரதவர்
- – நற்றிணை
- ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி
- -ஔவையார்
- தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
- பனையளவு காட்டும்
- - திருவள்ளுவமாலை , கபிலர்
NEW TAMIL BOOK 6.2 2024 (page no : 26)
- திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
- கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
- அங்கண் உலகு அளித்த லான்
- ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
- காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
- மேரு வலம் திரிதலான்
- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
- நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
- மேல்நின்று தான் சுரத்தலான்
- - இளங்கோவடிகள்
NEW TAMIL BOOK 6.2 2024 (page no : 29)
- காணி நிலம் வேண்டும் - பராசக்தி
- காணி நிலம் வேண்டும் - அங்குத்
- தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
- துய்ய நிறத்தினதாய் – அந்தக்
- காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
- கட்டித் தரவேண்டும் – அங்குக்
- கேணி அருகினிலே - தென்னைமரம்
- கீற்றும் இளநீரும்
- பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
- பக்கத்திலே வேணும் – நல்ல
- முத்துச் சுடர் போலே - நிலாவொளி
- முன்பு வரவேணும் – அங்குக்
- கத்துங் குயிலோசை – சற்றே வந்து
- காதில் படவேணும் - என்றன்
- சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம்
- தென்றல் வரவேணும்.
- - பாரதியார்
NEW TAMIL BOOK 6.2 2024 (page no : 33)
- நாராய், நாராய், செங்கால் நாராய்
- தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்
- - சத்திமுத்தப்புலவர்
- காக்கை குருவி எங்கள் சாதி
- பாரதியார்
NEW TAMIL BOOK 6.3 (page no : 52)
- அறிவியல் சிந்தனை கொள்
- ஆய்வில் மூழ்கு
- இயன்றவரை புரிந்துகொள்
- ஈடுபாட்டுடன் அணுகு
- உண்மை கண்டறி
- ஊக்கம் வெற்றிதரும்
- என்றும் அறிவியலே வெல்லும்
- ஏன் என்று கேள்
- ஐயம் தெளிந்து சொல்
- ஒருமித்துச் செயல்படு
- ஓய்வற உழை
- ஔடதமாம் அனுபவம்
- - நெல்லை சு.முத்து
NEW TAMIL BOOK 6.3 (page no : 55)
- ஆழக் கடலின் அடியில் மூழ்கி
- ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்
- நீல வானின் மேலே பறந்து
- நிலவில் வாழ நினைக்கின்றான்
- செயற்கைக் கோளை விண்ணில் ஏவி
- செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்
- இயற்கை வளமும் புயலும் மழையும்
- எங்கே என்று உரைக்கின்றான்
- எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்
- எந்திர மனிதனைப் படைக்கின்றான்
- இணைய வலையால் உலகம் முழுமையும்
- உள்ளங் கையில் கொடுக்கின்றான்
- உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
- உடலும் உயிரும் காக்கின்றான்
- அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து
- அனைத்தும் செய்து பார்க்கின்றான்
- நாளை மனிதன் கோள்களில் எல்லாம்
- நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்
- வேளை தோறும் பயணம் செய்ய
- விண்வெளிப் பாதை அமைத்திடுவான்.
- - பாடநூல் ஆசிரியர் குழு
NEW TAMIL BOOK 6.3 (page no : 56)
- வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
- சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
- சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
- – பாரதியார்
NEW TAMIL BOOK 6.3 (page no : 65)
- அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
- உள்ளழிக்கல் ஆகா அரண்
- - குறள்
NEW TAMIL BOOK 6.4 (page no : 78)
- மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
- மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
- தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
- சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- - ஒளவையார் , மூதுரை
NEW TAMIL BOOK 6.4 (page no : 80)
- ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
- ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
- நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
- நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
- மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு
- முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
- மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
- மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
- துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ
- சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
- வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு
- வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
- வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
- மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
- பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
- வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்
- - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
NEW TAMIL BOOK 6.4 (page no : 93)
- யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
- சாந்துணையும் கல்லாத வாறு.
- - குறள் எண்: 397
- ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
- நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை-அந்நாடு
- வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
- ஆற்றுணா வேண்டுவது இல்.
- -பழமொழி நானூறு: 4
NEW TAMIL BOOK 6.5 (page no : 100)
- நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
- இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
- ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
- நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
- சொல்லிய ஆசார வித்து
- - பெருவாயின் முள்ளியார் , ஆசாரக்கோவை
NEW TAMIL BOOK 6.5 (page no : 102)
- ஆராரோ ஆரிரரோ
- ஆராரோ ஆரிரரோ
- நந்தவனம் கண் திறந்து
- நற்றமிழ்ப் பூ எடுத்து
- பண்ணோடு பாட்டிசைத்துப்
- பார் போற்ற வந்தாயோ!
- தந்தத்திலே தொட்டில் கட்டித்
- தங்கத்திலே பூ இழைத்துச்
- செல்லமாய் வந்து உதித்த
- சேரநாட்டு முத்தேனோ!
- வாழை இலை பரப்பி
- வந்தாரைக் கை அமர்த்திச்
- சுவையான விருந்து வைக்கும்
- சோழநாட்டு முக்கனியோ!
- குளிக்கக் குளம் வெட்டிக்
- குலம்வாழ அணை கட்டிப்
- பசியைப் போக்க வந்த
- பாண்டிநாட்டு முத்தமிழோ!
- கண்ணே கண்மணியே
- கண்ணுறங்கு கண்ணுறங்கு!
- - தாலாட்டு
NEW TAMIL BOOK 6.5 (page no : 106)
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- - நன்னூல் நூற்பா 462
NEW TAMIL BOOK 6.6 (page no : 126)
- கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
- மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
- ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
- பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,
- மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
- நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
- ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
- சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
- முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
- எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,
- பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
- கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
- அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
- அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்
- - முடியரசன்
NEW TAMIL BOOK 6.6 (page no : 127)
- வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி
- மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
- கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
- காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
- சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
- சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!
- - பாரதியார்
NEW TAMIL BOOK 6.6 (page no : 129)
- விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
- விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
- அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா
- அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
- வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
- விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா
- பாயும்புயல் நம்ஊஞ்சல் - ஐலசா
- பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
- காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா
- கட்டுமரம் வாழும்வீடு - ஐலசா
- மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
- பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் - ஐலசா
- முழுநிலவே கண்ணாடி – ஐலசா
- மூச்சடக்கும் நீச்சல் யோகம் – ஐலசா
- தொழும்தலைவன் பெருவானம் - ஐலசா
- துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா
- - வாய்மொழி இலக்கியம்
NEW TAMIL BOOK 6.6 (page no : 133 , 134 , 135)
- தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
- பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
- ...........
- உமணர் போகலும்
- - நற்றிணை 183
- பாலொடு வந்து கூழொடு பெயரும்.....
- - குறுந்தொகை 23
- பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.......
- - அகநானூறு 149
- வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
- பிறவும் தமபோல் செயின்
- - திருக்குறள் 120
- நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
- - பட்டினப்பாலை
- கொள்வதும் மிகை கொளாது
- கொடுப்பதும் குறைபடாது
- - பட்டினப்பாலை
- சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
- கோடாமை சான்றோர்க்கு அணி.
- - திருக்குறள்
NEW TAMIL BOOK 6.6 (page no : 135)
- கொள்வதும் மிகை கொளாது
- கொடுப்பதும் குறைபடாது
- - பட்டினப்பாலை
- சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
- கோடாமை சான்றோர்க்கு அணி.
- - திருக்குறள்
NEW TAMIL BOOK 6.6 (page no : 137)
- பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்
- - ஔவை
NEW TAMIL BOOK 6.7 (page no : 148)
- புதுமைகள் செய்த தேசமிது
- பூமியின் கிழக்கு வாசலிது!
- தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
- தேசம் உடுத்திய நூலாடை!
- மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
- மெய்யுணர்வு என்கிற மேலாடை!
- காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
- காவிரிக் கரையில் எதிரொலிக்க
- கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
- கங்கை அலைகள் இசையமைக்க
- கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
- காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
- மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
- கிழக்குக் கரையின் நலம்கேட்கும்!
- புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
- புன்னகை செய்த பொற்காலம்!
- கல்லைக் கூட காவிய மாக்கிக்
- கட்டி நிறுத்திய கலைக்கூடம்!
- அன்னை நாட்டின் அமுத சுரபியில்
- அன்னிய நாடுகள்பசிதீர
- அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
- அறத்தின் ஊன்று கோலாக
- புதுமைகள் செய்த தேசமிது
- பூமியின் கிழக்கு வாசலிது!
- - தாராபாரதி
NEW TAMIL BOOK 6.7 (page no : 160)
- மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
- சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
- - குறள்
NEW TAMIL BOOK 6.8 (page no : 166)
- தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
- செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
- அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
- இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
- எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
- அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
- – தாயுமானவர்
NEW TAMIL BOOK 6.8 (page no : 168)
- வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது
- நேற்றுடன் ஒத்துப் போகாது
- கொடுப்பவரின் பரிசுடன்
- அவருக்குச் சமமாக எழுங்கள்
- சிறகுகளின் மீது எழுவது போல
- உழைக்கும்போது நீங்கள்
- புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்
- அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை
- ஓர் இசையாக மாற்றி விடுகிறது
- உங்களுக்குள் இருக்கும்
- நன்மையைப்பற்றித்தான்
- நான் பேச முடியும்
- தீமையைப் பற்றியல்ல
- உங்கள்சுயத்துடன்
- நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது
- நீங்கள் நல்லவர்
- என்னைப்போல் இரு
- பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம்
- முழுசாய்க்கொடு என்று
- பழம் வேரைப் பார்த்து
- நிச்சயமாகச் சொல்லாது
- கொடுப்பது பழத்தின் இயல்பு
- பெறுவது வேரின் இயல்பு
- உங்கள் பேச்சின் போது
- நீங்கள் விழிப்புணர்ச்சியுடன்
- இருப்பது நல்லது
- உறுதியாகக் கால்பதித்து
- உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில்
- நீங்கள் நல்லவர்
- – கலீல் கிப்ரான்
NEW TAMIL BOOK 6.8 (page no : 181)
- அன்பினில் இன்பம் காண்போம்;
- அறத்தினில் நேர்மை காண்போம்;
- துன்புறும் உயிர்கள் கண்டால்;
- துரிசறு கனிவு காண்போம்;
- வன்புகழ் கொடையிற் காண்போம்;
- வலிமையைப் போரில் காண்போம்;
- தன்பிறப் புரிமை யாகத்
- தமிழ்மொழி போற்றக் காண்போம்.
- – அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்.
NEW TAMIL BOOK 6.9 (page no : 189)
- நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன்
- நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
- துன்று கருணை நிறைந்த வள்ளல் - அங்கு
- சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!
- வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த
- மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
- வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு
- வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!
- யாரும் விரும்புவது இன்னுயிராம்; – அவர்
- என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
- பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்
- பாடு முழுதும் அறிந்திலீரோ?
- நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த
- நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
- பாரினில் மாரி பொழிந்திடவே – வயல்
- பக்குவ மாவது அறிந்திலீரோ?
- காட்டும் கருணை உடையவரே - என்றும்
- கண்ணிய வாழ்வை உடையவராம்;
- வாட்டும் உலகில் வருந்திடுவார்– இந்த
- மர்மம் அறியாத மூடரையா!
- காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுதன்
- கன்று வருந்திடப் பாலையெல்லாம்
- தேடிஉம் மக்களை ஊட்டுவதும் ஒரு
- தீய செயலென எண்ணினீரோ?
- அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை
- அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
- நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
- நன்மை உமக்கு வருமோ ஐயா?
- ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை
- ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
- தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச்
- செல்வது ஒருநாளும் இல்லைஐயா!
- ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை
- ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
- பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
- புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!
- - கவிமணி தேசிக விநாயகனார்
NEW TAMIL BOOK 6.9 (page no : 192)
- தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென
- முயலுநர் உண்மையானே
- புறம் - 182
- வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
- - வள்ளலார்
- வாழ்க்கை என்பது
- நீ சாகும் வரை அல்ல
- மற்றவர் மனதில்
- நீ வாழும் வரை
- - அன்னை தெரசா
- குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
- உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது.
- - கைலாஷ் சத்யார்த்தி
NEW TAMIL BOOK 6.9 (page no : 199)
- தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
- துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
- அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
- அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
- நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
- நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
- - கவிமணி தேசிக விநாயகனார்
NEW TAMIL BOOK 6.9 (page no : 199)
- குளிர்நீரில் குளித்தால்
- கூதல் அடிக்குமென்று
- வெந்நீரில் குளித்தால்
- மேலே கருக்குமென்று
- ஆகாச கங்கை
- அனல் உறைக்குமென்று
- பாதாள கங்கையைப்
- பாடி அழைத்தார் உன் தாத்தா
- தாலாட்டுப்
NEW TAMIL BOOK 7.1 (page no : 2)
- அருள்நெறி அறிவைத் தரலாகும்
- அதுவே தமிழன் குரலாகும்
- பொருள்பெற யாரையும் புகழாது
- போற்றா தாரையும் இகழாது
- கொல்லா விரதம் குறியாகக்
- கொள்கை பொய்யா நெறியாக
- எல்லா மனிதரும் இன்புறவே
- என்றும் இசைந்திடும் அன்பறமே
- அன்பும் அறமும் ஊக்கிவிடும்
- அச்சம் என்பதைப் போக்கிவிடும்
- இன்பம் பொழிகிற வானொலியாம்
- எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
- - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
NEW TAMIL BOOK 7.1 (page no : 3)
- கத்தி யின்றி ரத்த மின்றி
- யுத்த மொன்று வருகுது
- சத்தி யத்தின் நித்தி யத்தை
- நம்பும் யாரும் சேருவீர்!..
- கண்ட தில்லை கேட்ட தில்லை
- சண்டை யிந்த மாதிரி
- பண்டு செய்த புண்ணி யந்தான்
- பலித்த தேநாம் பார்த்திட!.
- - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
NEW TAMIL BOOK 7.1 (page no : 5)
- ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
- ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
- தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
- செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்
- பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்
- பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை வான்
- புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்
- பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
- முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான்
- முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்
- சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
- வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
- - உடுமலை நாராயணகவி
NEW TAMIL BOOK 7.1 (page no : 9)
- எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
- திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்
- - நன்னூல் நூற்பா
NEW TAMIL BOOK 7.1 (page no : 12)
- எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
- இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
- வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
- விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
- தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
- செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
- - பாரதிதாசன்
NEW TAMIL BOOK 7.2 (page no : 26)
- கார்த்திகை தீபமெனக்
- காடெல்லாம் பூத்திருக்கும்
- பார்த்திட வேண்டுமடீ - கிளியே
- பார்வை குளிருமடீ!
- காடு பொருள்கொடுக்கும்
- காய்கனி ஈன்றெடுக்கும்
- கூடிக் களித்திடவே - கிளியே
- குளிர்ந்த நிழல்கொடுக்கும்
- குரங்கு குடியிருக்கும்
- கொம்பில் கனிபறிக்கும்
- மரங்கள் வெயில்மறைக்கும் - கிளியே
- வழியில் தடையிருக்கும்
- பச்சை மயில்நடிக்கும்
- பன்றி கிழங்கெடுக்கும்
- நச்சர வங்கலங்கும் - கிளியே
- நரியெலாம் ஊளையிடும்
- அதிமது ரத்தழையை
- யானைகள் தின்றபடி
- புதுநடை போடுமடீ - கிளியே
- பூங்குயில் கூவுமடி!
- சிங்கம் புலிகரடி
- சிறுத்தை விலங்கினங்கள்
- எங்கும் திரியுமடீ - கிளியே
- இயற்கை விடுதியிலே!
- - சுரதா
NEW TAMIL BOOK 7.2 (page no : 28)
- நெஞ்சில் உரமுமின்றி
- நேர்மைத் திறமுமின்றி
- வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே
- வாய்ச்சொல்லில் வீரரடி.
- கூட்டத்தில் கூடிநின்று
- கூவிப் பிதற்றலன்றி
- நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே
- நாளில் மறப்பாரடீ.
- - பாரதியார்
NEW TAMIL BOOK 7.2 (page no : 29)
- ஊரின் வடகோடியில் அந்த மரம்
- ஐந்து வயதில் பார்த்தபோதும்
- இப்படியேதானிருந்தது
- ஐம்பதைத் தாண்டி இன்றும்
- அப்படியேதான்
- தாத்தாவின் தாத்தா காலத்தில்
- நட்டு வளர்த்த மரமாம்
- அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்
- பச்சைக்காய்கள் நிறம் மாறிச்
- செங்காய்த் தோற்றம் கொண்டதுமே
- சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்
- பளபளக்கும் பச்சை இலைகளூடே
- கருநீலக் கோலிக்குண்டுகளாய்
- நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்
- பார்க்கும்போதே நாவில் நீரூறும்
- காக்கை குருவி மைனா கிளிகள்
- இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்
- அணில்களும் காற்றும் உதிர்த்திடும்
- சுட்ட பழங்கள் பொறுக்க
- சிறுவர் கூட்டம் அலைமோதும்
- வயதுவந்த அக்காக்களுக்காய்
- கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்
- பழம் பொறுக்கும் தங்கச்சிகள்
- இரவில் மெல்லிய நிலவொளியில்
- படையெடுத்து வரும்
- பழந்தின்னி வௌவால் கூட்டம்
- தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்
- மரத்தின் குளிர்ந்த நிழலிலே
- கிளியாந்தட்டின் சுவாரசியம்
- புளியமிளாறுடன் அப்பா வரும்வரை
- நேற்று மதியம் நண்பர்களுடன்
- என் மகன் விளையாடியதும்
- அந்த மரத்தின் நிழலில்தானே
- பெருவாழ்வு வாழ்ந்த மரம்
- நேற்றிரவுப் பேய்க்காற்றில்
- வேரோடு சாய்ந்துவிட்டதாமே
- விடிந்தும் விடியாததுமாய்
- துஷ்டி கேட்கும் பதற்றத்தில்
- விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்
- குஞ்சு குளுவான்களோடு
- எனக்குப் போக மனமில்லை
- என்றும் என்மன வெளியில்
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- குன்றுகளின் நடுவே மாமலைபோல
- - ராஜமார்த்தாண்டன்
NEW TAMIL BOOK 7.2 (page no : 31)
- கொப்புகள் விலக்கி
- கொத்துக் கொத்தாய்
- கருவேலங்காய்
- பறித்துப் போடும் மேய்ப்பனை
- ஒருநாளும்
- சிராய்ப்பதில்லை
- கருவமுட்கள்.
- குழந்தை
- வரைந்தது
- பறவைகளை மட்டுமே
- வானம்
- தானாக உருவானது.
- - கலாப்ரியா
NEW TAMIL BOOK 7.3 (page no : 52)
- சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
- யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
- யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
- புலிசேர்ந்து போகிய கல்அளை போல
- ஈன்ற வயிறோ இதுவே
- தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே
- - காவற்பெண்டு
NEW TAMIL BOOK 7.3 (page no : 55)
- சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை
- துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்
- நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் - பாஞ்சைக்
- கோட்டை வளங்களைக் கேளுமையா
- கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் – மதில்
- கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்
- வீட்டிலுயர் மணிமேடைகளாம் - மெத்தை
- வீடுகளா மதிலோடை களாம்
- பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் – பணப்
- பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்
- ஆசார வாசல் அலங்காரம் - துரை
- ராசன் கட்டபொம்மு சிங்காரம்
- ராசாதி ராசன் அரண்மனையில் - பாஞ்சை
- நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்.
- விந்தையாகத் தெருவீதிகளும் – வெகு
- விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்
- நந்தவனங்களும் சந்தனச் சோலையும் – அங்கே
- நதியும் செந்நெல் கமுகுகளும்,
- வாரணச் சாலை ஒருபுறமாம் - பரி
- வளரும் சாலை ஒருபுறமாம்
- தோரண மேடை ஒருபுறமாம் - தெருச்
- சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்
- சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் – வளம்
- சொல்லி மயில் விளையாடிடுமாம்
- அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் - சில
- அதிசயம் சொல்கிறேன் கேளுமையா
- முயலும் நாயை விரட்டிடுமாம் - நல்ல
- முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
- பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து
- பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்.
- கறந்த பாலையுங் காகங் குடியாது – எங்கள்
- கட்டபொம்மு துரை பேரு சொன்னால்
- வரந்தருவாளே சக்க தேவி – திரு
- வாக்கருள் செய்வாளே சக்க தேவி
- - நா. வானமாமலை
NEW TAMIL BOOK 7.3 (page no : 66)
- பாயக் காண்பது சுதந்திரவெள்ளம்
- பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்
- - வ. உ. சிதம்பரம்
NEW TAMIL BOOK 7.4 (page no : 76)
- வானம் ஊன்றிய மதலை போல
- ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
- விண்பொர நிவந்த வேயா மாடத்து
- இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
- உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
- துறை....... (பெரும்பாணாற்றுப்படை 346 - 351)
- - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
NEW TAMIL BOOK 7.4 (page no : 79)
- உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
- புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
- இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
- விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
- கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
- மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய
- - மருதன் இளநாகனார்
NEW TAMIL BOOK 7.4 (page no : 83)
- முந்நீர் வழக்கம்
- - தொல்காப்பியம்
- கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
- - குறள் 496
- உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
- - அகநானூறு 255
- அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம்
- - பதிற்றுப்பத்து 52
- கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
- - மணிமேகலை (காதை 25, அடி 124)
- நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
- - புறப்பாடல் 66 (வெண்ணிக்குயத்தியார்)
- கலம் தந்த பொற்பரிசம்
- கழித்தோணியால் கரை சேர்க்குந்து
- - புறநானூறு 343
NEW TAMIL BOOK 7.5 (page no : 100)
- ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
- என்னை எழுதென்று சொன்னது வான்
- ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
- ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
- காடும் கழனியும் கார்முகிலும் வந்து
- கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
- ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
- அன்பினைச் சித்திரம் செய்க என்றார்
- சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
- தோகை மயில்வரும் அன்னம் வரும்
- மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
- மாணிக்கப் பரிதி காட்சி தரும்
- வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
- வெற்பென்று சொல்லி வரைக என்னும்
- கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து
- கூவின என்னை – இவற்றிடையே
- இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
- என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
- அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
- ஆவியில் வந்து கலந்ததுவே
- இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
- என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
- துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
- தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !
- - பாரதிதாசன்
NEW TAMIL BOOK 7.5 (page no : 103)
- வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
- மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
- எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
- விச்சைமற்று அல்ல பிற.
- - சமண முனிவர் , நாலடியார்
NEW TAMIL BOOK 7.5 (page no : 104)
- வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
- வேகாது வேந்த ராலும்
- கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
- நிறைவன்றிக் குறைவு றாது
- கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
- மிகஎளிது கல்வி யென்னும்
- உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
- பொருள்தேடி உழல்கின் றீரே
- - தனிப்பாடல் திரட்டு.
NEW TAMIL BOOK 7.5 (page no : 106)
- கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
- - குறள் 400
- விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
- கற்றாரோடு ஏனை யவர்
- - குறள் 410
- பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;
- எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்
- - பாரதியார்
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 7. (page no : )
NEW TAMIL BOOK 2024 8.1 (page no : 2)
- வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
- வாழிய வாழியவே!
- வான மளந்தது அனைத்தும் அளந்திடு
- வண்மொழி வாழியவே!
- ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
- இசைகொண்டு வாழியவே!
- எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
- என்றென்றும் வாழியவே!
- சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
- துலங்குக வையகமே!
- தொல்லை வினைதரு தொல்லை அகன்று
- சுடர்க தமிழ்நாடே!
- வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
- வாழ்க தமிழ்மொழியே!
- வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
- வளர்மொழி வாழியவே!
- - பாரதியார்
NEW TAMIL BOOK 2024 8.1 (page no : 3)
- செந்தமிழ் அந்தாதி
- செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
- நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
- மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
- எழில்மகவே! எந்தம் உயிர்.
- உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
- பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
- வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல்
- ஆரம்நீ; யாவும்நீ யே!
- - து. அரங்கன்
NEW TAMIL BOOK 2024 8.1 (page no : 5)
- நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
- இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
- திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்
- - தொல். 1579
- மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
- மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
- - தொல். 1580
- மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்
- - தொல். 1581
- - தொல்காப்பியர்
NEW TAMIL BOOK 2024 8.1 (page no : 9)
- கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி
- - சிலம்பு 5 : 112
NEW TAMIL BOOK 2024 8.1 (page no : 14)
- எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
- - தொல்காப்பியர்
- நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி
- - தொல்காப்பியர்
- குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு
- - தொல்காப்பியர்
NEW TAMIL BOOK 8.2 (page no : 24)
- ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்
- உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
- பாட இந்த ஓடை எந்தப்
- பள்ளி சென்று பயின்ற தோடி!
- ஏடு போதா இதன்கவிக் கார்
- ஈடு செய்யப் போரா ரோடி!
- நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
- நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்
- கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
- குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
- நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
- நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்
- செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
- சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்
- - வாணிதாசன்
NEW TAMIL BOOK 2024 8.2 (page no : 27)
- உருமங்கட் டியமுகிலால் - கோணக்காத்து
- உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்
- பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனே
- பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே
- சிங்காரமாய் வாங்கல்நகரில் - வைத்திருந்த
- தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே
- மங்காத காங்கயநாட்டில் - மேட்டுக்காட்டில்
- மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே
- ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடு
- அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்
- தாரங்களும் பிள்ளைகளுடன் - கூட்டிக்கொண்டு
- தானடந்து வேகமுடன் கூகூவென்றார்
- வாகுடனே தொண்டைமான்சீமை - தன்னிலே
- வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே
- சேகரமாய் வைத்தமரங்கள் - அத்தனையும்
- சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே
- சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் - கடலிலே
- தானடந்து வேகமுடன் வரும்போதிலே
- கொம்புசுத்திக் கோணக்காத்து - காலனைப்போல்
- கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததே
- ஆர்க்காடு மைசூர்வரைக்கும் - கோணக்காத்து
- அலறி அலறிமெத்த அடித்ததனால்
- மார்க்கமான சாலையில்போன – சனங்களெல்லாம்
- மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே
- தெத்துக்காடு காளப்பநாயக்கன் - பட்டியிலே
- செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்
- சித்தர்கள் பொருந்திவாழும் - கொல்லிமலை
- சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே
- இப்படிக்கிச் சேதங்களானால் - குமரேசா
- எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்
- மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு - வருகின்ற
- விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா
- - வெங்கம்பூர் சாமிநாதன்
NEW TAMIL BOOK 8.3 (page no : 48)
- தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
- ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
- யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
- நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்
- - பா.113
- பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
- தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
- ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
- பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே
- - பா.116
- - நீலகேசி
NEW TAMIL BOOK 8.3 (page no : )
NEW TAMIL BOOK 8.3 (page no : )
NEW TAMIL BOOK 8.2 (page no : )
NEW TAMIL BOOK 8.4 (page no : 70)
- கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
- மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
- முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
- அழகுக்கு அழகுசெய் வார்
- - குமரகுருபரர் , நீதிநெறி விளக்கம் 13
NEW TAMIL BOOK 8.4 (page no : 71)
- கல்வி கரையில கற்பவர் நாள்சில
- மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
- ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
- பாலுண் குருகின் தெரிந்து
- - நாலடியார்
NEW TAMIL BOOK 8.4 (page no : )
- கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு
- கண்ணியம் தவறாதே - அதிலே
- திறமையைக் காட்டு!
- ஆத்திரம் கண்ணை
- மறைத்திடும் போது
- அறிவுக்கு வேலை கொடு - உன்னை
- அழித்திட வந்த
- பகைவன் என்றாலும்
- அன்புக்குப் பாதை விடு!
- மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
- மாணிக்கக் கோயிலப்பா - இதை
- மறந்தவன் வாழ்வு
- தடம் தெரியாமல்
- மறைந்தே போகுமப்பா!
- இங்கே இருப்பது சில காலம்
- இதற்குள் ஏனோ அகம்பாவம்
- இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை
- எண்ணிப்பாரு தெளிவாகும்!
- - ஆலங்குடி சோமு
NEW TAMIL BOOK 8.4 (page no : 76)
- ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்
- இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
- வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
- விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்
- - குலோத்துங்கன்
NEW TAMIL BOOK 8.5 (page no : 94)
- பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
- கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
- மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
- கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.
- – சுந்தரர்
NEW TAMIL BOOK 8.5 (page no : 96)
- ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
- போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
- பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
- அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
- அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
- செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
- நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
- முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
- பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
- - நல்லந்துவனார் , கலித்தொகை
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.5 (page no : )
NEW TAMIL BOOK 8.9 (page no : 192)
- அறிவுஅருள் ஆசைஅச்சம்
- அன்புஇரக்கம் வெகுளிநாணம்
- நிறைஅழுக்காறு எளிமை
- நினைவுதுணிவு இன்பதுன்பம்
- பொறைமதம் கடைப்பிடிகள்
- பொச்சாப்பு மானம்அறம்
- வெறுப்புஉவப்பு ஊக்கம்மையல்
- வென்றிஇகல் இளமை மூப்பு
- மறவிஓர்ப்பு இன்னபிற
- மன்னும்உயிர்க் குணங்கள்எல்லாம்
- குறைவறப் பெற்றவள்நீ
- குலமாதே பெண்ணரசி
- இறைமகன் வந்திருக்க
- இன்னும்நீ உறங்குதியோ
- புறப்படு புன்னகைநீ
- பூத்தேலோ ரெம்பாவாய்!
- - இறையரசன்
NEW TAMIL BOOK 8.9 (page no : 193)
- உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
- செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;
- செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
- தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
- எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
- நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
- சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
- பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
- - திருப்பாவை 14
NEW TAMIL BOOK 8.9 (page no : 195)
- நட
- நாளைமட்டுமல்ல
- இன்றும்
- நம்முடையதுதான்
- நட
- பாதங்கள்
- நடக்கத்
- தயாராய் இருந்தால்
- பாதைகள்
- மறுப்புச் சொல்லப்
- போவதில்லை.
- நெய்யாய்த் திரியாய்
- நீயே மாறினால்
- தோல்வியும் உனக்கொரு
- தூண்டுகோலாகும்!
- வெற்றி
- உனைச்சுற்றி
- வெளிச்சவிதை
- விதைக்கும்!
- கவலைகளைத்
- தூக்கிக்கொண்டு
- திரியாதே ...
- அவை
- கைக்குழந்தைகளல்ல..
- ஓடிவந்து கைகுலுக்க
- ஒருவருமில்லையா?
- உன்னுடன் நீயே
- கைகுலுக்கிக் கொள்!
- தூங்கி விழுந்தால்
- பூமி உனக்குப்
- படுக்கையாகிறது.
- விழித்து நடந்தால்
- அதுவே உனக்குப்
- பாதையாகிறது!
- நீ
- விழித்தெழும் திசையே
- பூமிக்குக் கிழக்கு!
- உன்
- விரல்களில் ஒளிரும்
- சூரியவிளக்கு!
- நட!
- நாளைமட்டுமல்ல
- இன்றும்
- நம்முடையதுதான்
- நட!
- - மு.மேத்தா
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 4)
- கனவொன்று நான் கண்டேன்
- உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத்
- தாக்கினாலும்
- தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன்
- நண்பர்கள் நகரம் என்றொரு புதுநகரம்
- வந்தது என் கனவில்.
- அன்பைவிடப் பெரிதென்ற ஒன்றும் அந்நகரில்
- இல்லை,
- அன்பின் வழித்தடத்தில் மற்றெல்லாம்
- சென்றன அதன் பின்னே.
- எந்நேரமும், மாந்தர் செய்வது எதுவென்றாலும்,
- அன்பேதான் தெரிந்தது அங்கே அவற்றில்
- எல்லாம்,
- மக்கள் தோற்றத்திலும் அன்பே,
- அன்பேதான் அவர் மொழியும்.
- - வால்ட் விட்மன்
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 5)
- புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்
- நான் தப்பிப் போகத்தான் வேண்டும்
- அங்கே ஆனால் உடலோ சோகத்தில்! வானுக்கும்
- முன்பின் தெரியாத கடல் நுரைக்குமிடையே
- மயக்கத்தில் பறவைகள் பறப்பதை
- உணர்கிறேன்!
- என் கண்களில் பிரதிபலிக்கும் பழைய
- பூங்காக்களோ
- எழுதப்படாத தாளின் தூய வெண்மையின் மீது
- என் விளக்கிலிருந்து வீசும் பயனற்ற ஒளியோ
- தன் குழந்தைக்குப் பாலூட்டும்
- அவ்விளம்பெண்ணோ
- எதுவும் தடுக்காது கடல்நீரில் நனையும்
- இந்நெஞ்சை.
- நான் கிளம்பிச் செல்வேன்! பாய்மரங்களைத்
- தூக்கியெறிந்து விட்டிருக்கும் நீராவிக் கப்பலே
- புறப்படு, தொலைதேச இயற்கையை நோக்கி.
- இரக்கமற்ற எதிர்பார்ப்புகளில் மனமுடைந்து
- ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான
- வழியனுப்பலை
- இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை!
- அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி
- மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து
- புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை..
- ஆனால், இதோ கேள் என் நெஞ்சே
- மாலுமிகளின் பாடலை!
- - ஸ்டெஃபான் மல்லார்மே
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 5)
- எத்தனை பெயர்கள்!
- திங்கட்கிழமைகள்
- செவ்வாய்க்கிழமைகளுடனும்
- ஆண்டு முழுவதுடன் வாரமும் சிக்கிக்
- கொண்டுள்ளன.
- களைத்துப்போன உம் கத்திரிக்கோலால்
- காலத்தை வெட்ட முடியாது.
- பகலின் பெயர்கள் அனைத்தையும்
- இரவின் நீர் அழைக்கிறது.
- இரவில் நான் உறங்குகையில்
- என்னை என்னவென்று அழைக்கின்றனர்
- அல்லது என்னவென்று அழைப்பதில்லை?
- தூங்கும்போது நான் நானாக இல்லையெனில்
- விழித்தெழுந்த பின் நான் யார்?
- - பாப்லோ நெரூடா
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 7)
- என் அம்மை, ஒற்றியெடுத்த
- நெற்றிமண் அழகே!
- வழிவழி நினதடி தொழுதவர்,
- உழுதவர், விதைத்தவர்,
- வியர்த்தவர்க்கெல்லாம்
- நிறைமணி தந்தவளே!
- உனக்குப்
- பல்லாண்டு
- பல்லாண்டு
- பல்லாயிரத்தாண்டு
- பாடத்தான் வேண்டும்!
- காற்றிலேறிக்
- கனைகடலை, நெருப்பாற்றை,
- மலைமுகடுகளைக் கடந்து
- செல் எனச் செல்லுமோர் பாடலை
- கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
- காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
- உரமெலாம் சேரப்
- பாடத்தான் வேண்டும்!
- ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
- மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
- விரல்முனையைத் தீயிலே தோய்த்து
- திசைகளின் சுவரெலாம்
- எழுதத்தான் வேண்டும்
- எழுகின்ற யுகத்தினோர் பாடலை.
- - சு. வில்வரத்தினம்
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 8)
- தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை.
- - இரசூல் கம்சதோவ்
NEW TAMIL SAIS EDITION 11.1 (page no : 9)
- முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
- புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
- பாயிரம் பொது, சிறப்பு எனஇரு பாற்றே
- நூலே நுவல்வோன் நுவலும் திறனே
- கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
- எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்
- ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
- நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
- கேட்போர் பயனோடு ஆயஎண் பொருளும்
- வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே
- காலம் களனே காரணம் என்றுஇம்
- மூவகை ஏற்றி மொழிநரும் உளரே
- ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
- பாயிரம் இல்லது பனுவல் அன்றே
- மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
- ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல் - நாடிமுன்
- ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
- பெய்துரையா வைத்தார் பெரிது.
- - பவணந்தி முனிவர்
NEW TAMIL SAIS EDITION 11.2 (page no : 31)
- குருவிகளையும்
- கூடுகளையும்
- பார்க்கக் கூடவில்லை
- முன்பென்றால் ஊரில்
- அடைமழைக்காலம்
- ஆற்றில் நீர் புரளும்
- கரையெல்லாம் நெடுமரங்கள்
- கரைகின்ற பறவைக் குரல்கள்
- போகும் வழியெல்லாம்
- தூக்கணாங்குருவிக் கூடுகள்
- காற்றிலாடும் புல் வீடுகள்
- மூங்கில் கிளையமர்ந்து
- சுழித்தோடும் நீருடன்
- பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
- மண்ணின் மார்பு
- சுரந்த காலமது
- வெட்டுண்டன மரங்கள்
- வான் பொய்த்தது
- மறுகியது மண்
- ஏதிலியாய்க் குருவிகள்
- எங்கோ போயின.
- - அழகிய பெரியவன்
NEW TAMIL SAIS EDITION 11.2 (page no : 32)
- வடகரை நாடு
- மலரில் ஆரளி இந்துளம் பாடும்
- மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்
- சலச வாவியில் செங்கயல் பாயும்
- தரளம் ஈன்றவெண் சங்கயல் மேயும்
- குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்
- குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்
- புலவர் போற்றும் திருமலைச் சேவகன்
- புகழ்வட ஆரி நாடெங்கள் நாடே.
- தென்கரை நாடு
- வளருங் காவில் முகில்தொகை ஏறும்- பொன்
- மாடம் எங்கும் அகிற்புகை நாறும்
- குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும்
- கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்
- இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்-முத்(து)
- ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்
- அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத்- தென்
- ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே.
- - பெரியவன் கவிராயர்
NEW TAMIL SAIS EDITION 11.2 (page no : 35)
- காயா கொன்றை நெய்தல் முல்லை
- போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
- பூவணி கொண்டன்றால் புறவே
- பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே
- - பேயனார்
NEW TAMIL SAIS EDITION 11.2 (page no : 41)
- மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
- வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!
- வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
- வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!
- கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
- கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே!
- பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும்
- பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!
- - கவிமணி
NEW TAMIL SAIS EDITION 11.3 (page no : 48)
- சென்னி குளநகர் வாசன் - தமிழ்
- தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
- செகமெச்சிய மதுரக்கவி
- யதனைப்புய வரையிற்புனை
- தீரன்; அயில் வீரன்.
- வன்ன மயில்முரு கேசன் - குற
- வள்ளி பதம்பணி நேசன் - உரை
- வரமேதரு கழுகாசல
- பதிகோயிலின் வளம்நான்மற
- வாதே சொல்வன் மாதே!
- கோபுரத் துத்தங்கத் தூவி - உம்பர்
- கோபுரத் துக்கப்பால் மேவி - கண்கள்
- கூசப்பிர காசத்தொளி
- மாசற்று விலாசத்தொடு
- குலவும் புவி பலவும்.
- நூபுரத் துத்தொனி வெடிக்கும் – பத
- நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் – அங்கே
- நுழைவாரிடு முழவோசைகள்
- திசைமாசுணம் இடியோ என
- நோக்கும் படி தாக்கும்.
- சந்நிதி யில்துஜஸ் தம்பம் - விண்ணில்
- தாவி வருகின்ற கும்பம் – எனும்
- சலராசியை வடிவார்பல
- கொடிசூடிய முடிமீதிலே
- தாங்கும்; உயர்ந் தோங்கும்.
- உன்னத மாகிய இஞ்சி-பொன்னாட்டு
- உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
- உயர்வானது பெறலால் அதில்
- அதிசீதள புயல்சாலவும்
- உறங்கும்; மின்னிக் கறங்கும்.
- அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
- அந்தத் திருப்புகழ் முழக்கம் -பல
- அடியார்கணம் மொழிபோதினில்
- அமராவதி இமையோர்செவி
- அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
- கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
- காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
- கனல்ஏறிய மெழுகாய்வரு
- பவர்ஏவரும் இகமேகதி
- காண்பார்; இன்பம் பூண்பார்.
- - சென்னிகுளம் அண்ணாமலையார்
NEW TAMIL SAIS EDITION 11.3 (page no : 50)
- அம்ம வாழி தோழி நம்மூர்ப்
- பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
- தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
- நன்றுநன் றென்னும் மாக்களோடு
- இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.
- - வெள்ளிவீதியார்
NEW TAMIL SAIS EDITION 11.3 (page no : 52)
- உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
- அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
- தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
- துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
- புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
- உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
- அன்ன மாட்சி அனையர் ஆகித்
- தமக்கென முயலா நோன்தாள்
- பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
- - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
NEW TAMIL SAIS EDITION 11.3 (page no : 55)
- கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
- புல்லாளே, ஆய மகள்
- அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
- நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
- நைவாரா ஆய மகள் தோள்.
- - கலி. 103:63-67
NEW TAMIL SAIS EDITION 11.9 (page no : 206)
- விழுந்த மலர்
- கிளைக்குத் திரும்புகிறது
- அடடா... வண்ணத்துப்பூச்சி.
- - மோரிடாகே
- பட்டுப்போன மரக்கிளை,
- அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
- இலையுதிர் கால மாலை.
- - பாஷோ
- பெட்டிக்கு வந்த பின்
- எல்லாக் காய்களும் சமம்தான்
- சதுரங்கக் காய்கள்.
- - இஸ்ஸா
NEW TAMIL SAIS EDITION 11.9 (page no : 207)
- சிறகிலிருந்து பிரிந்த
- இறகு ஒன்று
- காற்றின் தீராத பக்கங்களில்
- ஒரு பறவையின் வாழ்வை
- எழுதிச் செல்கிறது.
- - பிரமிள்
NEW TAMIL SAIS EDITION 11.9 (page no : 208)
- விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
- வெளுப்பது உனது விடியலில்லை
- முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
- முடிதல் என்பது எதற்குமில்லை.
- கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
- காகிதம் தின்பது கல்வியில்லை
- பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
- பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
- குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
- கொண்ட அழுக்கோ போகவில்லை
- அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
- அளித்த தெதுவும் உனதல்ல.
- உடைஅணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
- உடலுக் கணிவது உடையல்ல
- விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
- வினாவாய் நீயே நிற்கின்றாய்.
- தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
- தின்னும் பசிகளுக் கிரையாவாய்
- வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
- வெற்றியிலே தான் தோற்கின்றார்.
- 'நான்' என்பாய் அது நீயில்லை – வெறும்
- நாடக வசனம் பேசுகிறாய்
- ஏன்? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
- ஏன் என்னும் ஒளியில் உனைத் தேடு.
- பா வகை: சிந்து
- - அப்துல் ரகுமான்
NEW TAMIL SAIS EDITION 11.9 (page no : 210)
வேதியர் வடிவில் கண்ணன் இரந்து கேட்டல்
தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீஎனக் கேட்டேன்
மேருவி னிடைத்தவம் பூண்டேன்
ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்
இயைந்ததுஒன்று இக்கணத்து அளிப்பார்
தூண்டிய கவனத் துரகதத் தடந்தேர்
சுடர்தரத் தோன்றிய தோன்றால்!
"தரத்தகுபொருள்நீநவில்க" எனக் கன்னன் உரைத்தல்
- என்றுகொண்டு அந்த அந்தணன் உரைப்ப
- இருசெவிக்கு அமுதுஎனக் கேட்டு
- வென்றிகொள் விசயன் விசயவெங் கணையால்
- மெய்தளர்ந்து இரதமேல் விழுவோன்
- நன்றுஎன நகைத்துத் தரத்தகு பொருள்நீ
- நவில்க எனநான் மறையவனும்
- ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும்
- உதவுக என்றலும் உளம்மகிழ்ந்தான்
கன்னன் தனது புண்ணியத்தைத் தானமாகத் தரல்
- ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை
- அகத்ததோ புறத்ததோ அறியேன்
- பாவியேன் வேண்டும் பொருள்எலாம் நயக்கும்
- பக்குவம் தன்னில் வந்திலையால்
- ஓவுஇலாது பயன்செய் புண்ணியம் அனைத்தும்
- உதவினேன் கொள்கநீ உனக்குப்
- பூவில்வாழ் அயனும் நிகர்அலன் என்றால்
- புண்ணியம் இதனினும் பெரிதோ?
கன்னன் அளித்த புண்ணியங்களைக் கண்ணன் உள்ளங்கையால் ஏற்றல்
- என்ன முன்மொழிந்து கரம்குவித்து இறைஞ்ச
- இறைஞ்சலர்க்கு எழிலிஏறு அனையான்
- கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கிக்
- கைப்புனலுடன் தருக என்ன
- அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால்
- அளித்தலும் அங்கையால் ஏற்றான்
- முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
- மூவுலகமும் உடன் கவர்ந்தோன்
கன்னன் வேண்டும் வரம்
- மல்லல்அம் தொடையல் நிருபனை முனிவன்
- மகிழ்ந்து நீவேண்டிய வரங்கள்
- சொல்லுக உனக்குத் தருதும்என்று உரைப்ப
- சூரன் மாமதலையும் சொல்வான்
- அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம்உண்
- டாயினும் ஏழ்எழு பிறப்பும்
- இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லைஎன்று உரையா
- இதயம்நீ அளித்தருள் என்றான்
கண்ணன்வரம்தருதல்
- மைத்துனன் உரைத்த வாய்மைகேட்டு ஐயன்
- மனமலர் உகந்துஉகந்து அவனைக்
- கைத்தல மலரால் மார்புறத் தழுவிக்
- கண்மலர் கருணைநீர் ஆட்டி
- எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள்
- ஈகையும் செல்வமும் எய்தி
- முக்தியும் பெறுதி முடிவில்என்று உரைத்தான்
- மூவரும் ஒருவனாம் மூர்த்தி
- - வில்லிபுத்தூரார்
NEW TAMIL SAIS EDITION 11.10 (page no : 229)
- ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
- பறவைகளோடு எல்லை கடப்பேன்
- பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
- எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
- நீளும் கைகளில் தோழமை தொடரும்
- நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
- எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
- உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
- கூவும் குயிலும் கரையும் காகமும்
- விரியும் எனது கிளைகளில் அடையும்
- போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
- பொங்கும் சமத்துவப்புனலில் கரையும்
- எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
- என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
- கூண்டில் மோதும் சிறகுகளோடு
- எனது சிறகிலும் குருதியின் கோடு
- சமயம் கடந்து மானுடம் கூடும்
- சுவர் இல்லாத சமவெளி தோறும்
- குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன்
- மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்.
- - இன்குலாப்
NEW TAMIL SAIS EDITION 11.10 (page no : 230)
இலக்கு வேண்டும்
- காலையில் கடிநகர் கடந்து நமது
- வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
- இன்று இரா முடிக்கினும் முடியும்; ....
- எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை
- இயக்குதற்கு இன்பம் பயக்கும்ஓர் இலக்கு
- வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம்.
- ஈண்டு எப்பொருள்தான் இலக்கற்று இருப்பது?
புல்லின் பரிவு
- இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல்
- சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி;
- அதன்சிறு பூக்குலை அடியொன்று உயர்த்தி
- இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை
- நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
- பதமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து
- ஆசுஇலாச் சிறுகாய் ஆக்கி, இதோ! என்
- தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே
- "இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில்
- தழைப்பதற்கு இடமிலை; சிறார்நீர் பிழைப்பதற்கு
- ஏகுமுன், புள் ஆ எருது அயத்து ஒருசார்
- சிக்கிநீர் சென்மின்!" எனத்தன் சிறுவரைப்
- புக்கவிட் டிருக்கும்இப் புல்லின் பரிவும்
- பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையும்
- சிறுமையாச் சிந்தனை செயாதுஆங்காங்கு
- தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
- போற்றுதம் குறிப்பிற்கு ஏற்றதோர் முயற்சியும்
- பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,
- ஆர்த்தெழும் அன்பினால் அனைத்தையுங் கலந்துதம்
- என்பெலாம் கரைக்கும்நல் இன்பம் திளைப்பர்
வாய்க்காலின் விசித்திரம்
- தமக்குஊண் நல்கும் வயற்குஉப யோகம்
- எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
- செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
- அலைகடல் மலையா மலையலை கடலாப்
- புரட்டிட அன்றோ நடப்பதிச் சிறுகால்!
- பார், இதோ! பரற்களை நெறுநெறென் றரைத்துச்
- சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
- தன்வலிக்கு அடங்கிய மண்கல் புல்புழு
- இன்னதென்று இல்லை; யாவையும் ஈர்த்துத்
- தன்னுள் படுத்தி முந்நீர் மடுவுள்
- காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
- சாலத் தகும்இவை எனஓர்ந்து உருட்டிக்
- கொண்டு சென்று இட்டுமற்று "ஐயா,
- அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
- சென்றபின் பெருமலைச் சிகரம் முதலாக்
- குன்றுவீழ் அருவியாய்த் தூங்கியும் குகைமுகம்
- இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும்
- கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந்து ஓடியும்,
- ஊறிடும் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்
- ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்
- மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
- பற்பல பாடுயான் பட்டங்கு ஈட்டியது
- அற்பமே ஆயினும் ஆதர வாய்க்கொள்;
- இன்னமும் ஈதோ ஏகுவன் எனவிடை
- பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
- வந்துஇவண் அடைந்து, மற்றும் இராப்பகல் மறந்து
- நிரந்தரம் உழைக்கும்இந் நிலைமையர் யாவர்?
- (நீரைக் கையால் தடுத்து)
- நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!
- இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி
- நீரே! நீரே! என்னை உன் நிலைமை?
- யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
- நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
- உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு
- என்னை?
நாங்கூழ்ப்புழுவின் பொதுநலம்
(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)
- ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
- ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!
- உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
- உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ.
- எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை
- விடுத்தனை இதற்கா, எடுத்தஉன் யாக்கை.
- உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
- விழுமிய சேறாய் வேதித்து உருட்டி
- வெளிக்கொணர்ந் தும் புகழ் வேண்டார்போல
- ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
- இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்
- எப்படி உண்டாம்? எண்ணாது உனக்கும்
- குறும்புசெய் எறும்பும் கோடி கோடியாய்ப்
- புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
- ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள?
- (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)
- விழுப்புகழ் வேண்டலை. அறிவோம், ஏனிது?
- துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ!
- எங்கும் இங்ஙனே இணையிலா இன்பும்
- பங்கமில் அன்பும் தங்குதல் திருந்தக்
- காணார் பேணும் வாணாள் என்னே?
- - மனோன்மணீயம் சுந்தரனார்
OLD TAMIL BOOK 7.4 (page no : 2)
- உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
- பால்பற்றிச் சொல்லா விடுதலும் தோல்வற்றிச்
- சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
- தூஉயம் என்பார் தொழில்.
- திரிகடுகம் (நல்லாதனார்)
OLD TAMIL BOOK 7.4 (page no : 2)
- இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
- நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் எவ்வுயிர்க்கும்
- துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
- நன்றறியும் மாந்தர்க் குள.
- திரிகடுகம் (நல்லாதனார்)
OLD TAMIL BOOK 7.4 (page no : 3)
- முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
- நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்
- தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
- தூற்றின்கண் தூவிய வித்து.
- திரிகடுகம் (நல்லாதனார்)
OLD TAMIL BOOK 7.5 (page no : 19)
- என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில்
- முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் அன்புஎன்னாம்
- புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
- மண்சுமந்தார் என்றுருகு வார்.
- - குமரகுருபரர் (திருவாரூர் நான்மணிமாலை)
OLD TAMIL BOOK 7.7 (page no : 4)
- மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
- ஆழி தரித்தே அருளும்கை சூழ்வினையை
- நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
- காக்கும்கை காராளர் கை.
- - கம்பர்
OLD TAMIL BOOK 7.7 (page no : 8)
- தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.
OLD TAMIL BOOK 7.7 (page no : 23)
- அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
- பெற்றான் பொருள்வைப் புழி.
- - குறள், 226
OLD TAMIL BOOK 8.1 (page no : 2)
- முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
- சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
- கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
- விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.
- - தாயுமானவர்
OLD TAMIL BOOK 8.1 (page no : 18)
- நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலிஇடைத்
- தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்
- அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே.
- - நன்னூல், 94
OLD TAMIL BOOK 8.1 (page no : 19)
- யகரம் வரக் குறள் உத்திரி இகரமும்
- அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய
- - நன்னூல், 93
OLD TAMIL BOOK 8.1 (page no : 21)
- பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
- செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி யளாகி
- அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
- வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.
- - கம்பராமாயணம்
OLD TAMIL BOOK 8.1 (page no : 21)
- நாடும் மொழியும் நமதிரு கண்கள்
- நாம்தினம் போற்றி வணங்கிடு வோமே
- கூடும் அன்பினில் வேற்றுமை மறந்தே
- குலவிடு வோமே இந்தியர் என்றே
- தேடிய சுதந்தரப் பயிரின் வேலி
- தூயநல் ஒருமைப் பாடே ஆகும்
- ஓடிடும் வேற்றுமை நோயே உரிய
- ஒருமைப் பாடெனும் மாமருந் தாலே.
OLD TAMIL BOOK 8.1 (page no : 22)
- நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே
- நல்ல நிலை சேர்க்கும்
- புல்லொழுக்கம் தீமை - பெண்ணே
- பொய்யுரைத்தல் தீமை
- இல்லறமே பெண்ணே- இங்கு
- நல்லற மென்பார்கள்
- கல்வியுடையோரே - பெண்ணே
- கண்ணுடைய ராவார்.
OLD TAMIL BOOK 8.1 (page no : 25)
- கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு
- நானோர் தும்பி
- - பாரதிதாசன்
- உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு
- - பாரதிதாசன்
- தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
- தமிழ் இன்பத் தமிழ்
- எங்கள் உயிருக்கு நேர்!
- - பாரதிதாசன்
- இருட்டறையில் உள்ளதடா உலகம்
- - பாரதிதாசன்
- புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
- போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
- - பாரதிதாசன்
OLD TAMIL BOOK 8.1 (page no : 29)
- செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
- தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
- தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
- சக்தி பிறக்குது மூச்சினிலே எங்கள்
- காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
- கண்டதோர் வையை பொருநைநதி – என
- மேவிய ஆறு பலவோடத் - திரு
- மேனி செழித்த தமிழ்நாடு
- கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
- கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
- பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
- பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
- வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
- அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
- யாரம் படைத்த தமிழ்நாடு
- - பாரதியார்
OLD TAMIL BOOK 8.2 (page no : 35)
- குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
- கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
- மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
- திருவுந்தீர் வின்றேல் இனிது.
- - பூதஞ்சேந்தனார் , இனியவை நாற்பது
- சலவரைச் சாரா விடுதல் இனிதே
- புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
- மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
- தகுதியால் வாழ்தல் இனிது.
- - பூதஞ்சேந்தனார் , இனியவை நாற்பது
OLD TAMIL BOOK 8.2 (page no : 37)
- பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை - என்னைப்
- போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை
- மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை - அந்த
- மாரன் அழகெனக்கு வேண்டிய தில்லை.
- கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
- கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
- நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
- நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.
- - க.சச்சிதானந்தன்
OLD TAMIL BOOK 8.2 (page no : 43)
- காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப்
- பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான்
- ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
- பேரறி வாளர் நெஞ்சில் பிறந்தபத்திரிகைப் பெண்ணே
- - பாரதிதாசன்
OLD TAMIL BOOK 8.2 (page no : 56)
- நூலைப்படி – சங்கத்தமிழ்
- நூலைப்படி – முறைப்படி
- நூலைப்படி
- காலையில்படி கடும்பகல் படி
- மாலை இரவு பொருள்படும்படி
- கற்பவை கற்கும்படி
- வள்ளுவர் சொன்னபடி
- கற்கத்தான் வேண்டும் அப்படிக்
- கல்லாதவர் வாழ்வ தெப்படி
- அறம்படி பொருளைப் படி
- அப்படியே இன்பம் படி
- இறந்த தமிழ்நான் மறை
- பிறந்த தென்று சொல்லும்படி
- சாதி என்னும் தாழ்ந்தபடி
- நமக்கெல்லாம் தள்ளுபடி
- சேதி அப்படித் தெரிந்துபடி
- தீமை வந்திடுமே மறுபடி
- - பாரதிதாசன்
OLD TAMIL BOOK 8.3 (page no : 60)
- தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
- பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
- வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
- வெள்ளைக் குறட்பா விரி.
- - கபிலர் , திருவள்ளுவ மாலை
OLD TAMIL BOOK 8.3 (page no : 61)
- ஆழிவடி அம்புஅலம்ப நின்றானும் அன்றொருகால்
- ஏழிசைநூல் சங்கத்(து) இருந்தானும் - நீள்விசும்பின்
- நல்தேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
- செற்றானும் கண்டாய்இச் சேய்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
- அரவின் பசுந்தலைஎன் றஞ்சி - இரவெல்லாம்
- பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
- வள்ளைக் குருநாடர் மன்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
- பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாது
- அருங்கடாநிற்கும் அவந்திநாடு ஆளும்
- இருங்கடா யானை இவன்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்
- தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்(து)
- அந்தோ எனஎடுக்கும் அங்கநாடு ஆளுடையான்
- செந்தேன் மொழியாய்இச் சேய்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- வெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
- கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் புள்ளோடு
- வண்டுஇரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
- தண்தெரியல் தேர்வேந்தன் தான்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- காவலரைத் தன்சேடி காட்டக்கண்டு ஈரிருவர்
- தேவர்நளன் உருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
- மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணாநின்
- றூசலா டுற்றாள் உளம்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- மின்னும்தார் வீமன்தன் மெய்ம்மரபில் செம்மைசேர்
- கன்னியான் ஆகில் கடிமாலை அன்னம்தான்
- சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
- மன்னவனைத் தன்மனத்தே வைத்து.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- கண்இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
- வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
- நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
- அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- விண்அரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
- கண்அகல் ஞாலம் களிகூர - மண்அரசர்
- வன்மாலை தன்மனத்தே சூட வயவேந்தைப்
- பொன்மாலை சூட்டினாள் பொன்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- திண்தோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
- வெண்தா மரையாய் வெளுத்தவே - ஒண்தாரைக்
- கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
- பூமாலை பெற்றிருந்த போது.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
- மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச்
- செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்
- பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
- நன்மாலை வேலான் நளன்.
- - புகழேந்திப்புலவர் , நளவெண்பா
OLD TAMIL BOOK 8.3 (page no : 85)
- கிளையினிற் பாம்பு தொங்க
- விழுதென்று குரங்கு தொட்டு
- விளக்கினைத் தொட்ட பிள்ளை
- வெடுக்கெனக் குதித்ததைப் போல்
- கிளைதோறும் குதித்துத் தாவிக்
- கீழுள்ள விழுதை யெல்லாம்
- ஒளிப்பாம்பாய் எண்ணி யெண்ணி
- உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.
- - பாரதிதாசன், அழகின் சிரிப்பு
OLD TAMIL BOOK 8.4 (page no : 2)
- தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
- தியங்கியே கிடந்ததைக் கண்டு
- தான்அதைச் சம்பு வின்கனி என்று
- தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
- வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி
- மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்
- போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
- புதுமையோ இதுஎனப் புகன்றாள்.
- - விவேகசிந்தாமணி
OLD TAMIL BOOK 8.4 (page no : 3)
- வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்
- வண்மையும் தியாகமும் இணைதீர்
- தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
- துலங்கிடத் தீமையும் துயரும்
- சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
- செங்கதி ரவனெனத் தகைய
- தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
- தாள்மலர் பணிவதே தவமாம்.
- - அசலாம்பிகை அம்மையார்
OLD TAMIL BOOK 8.4 (page no : 7)
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
- நற்றவ வானினும் நனிசிறந் தனவே.
- - பாரதியார்
OLD TAMIL BOOK 8.4 (page no : 23)
- வீடு தோறும் கலையின் விளக்கம்
- வீதி தோறும் இரண்டொரு பள்ளி
- நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
- நகர்க ளெங்கும் பலபல பள்ளி
- தேடு கல்வியி லாததொ ரூரைத்
- தீயி னுக்கிரை யாக மடுத்தல்
- கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
- கேண்மை கொள்ள வழியிலை கண்டீர்.
OLD TAMIL BOOK 8.5 (page no : 25)
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
- திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
- உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
- உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
- திருமூலர் , திருமந்திரம்
OLD TAMIL BOOK 8.5 (page no : 26)
- நகைசெய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள்
- பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற
- முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங்
- குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே.
- - வீரமாமுனிவர் , தேம்பாவணி
OLD TAMIL BOOK 8.5 (page no : 41)
- புகழெனின் உயிரும் கொடுக்குவர்
- பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்.
- - புறநானூறு
OLD TAMIL BOOK 8.5 (page no : 43)
- பெண்கட்குக் கல்வி வேண்டும்
- உலகினைப் பேணு தற்கே
- பெண்கட்குக் கல்வி வேண்டும்
- கல்வியைப் பேணுதற்கே
- கல்வியில்லாத பெண்கள்
- களர்நிலம் அந்நிலத்தில்
- புல்விளைந்திடலாம்; நல்ல
- புதல்வர்கள் விளைதல் இல்லை
OLD TAMIL BOOK 8.6 (page no : 44)
- தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
- போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
- மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
- ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே.
- – கம்பர் , கம்பராமாயணம்
OLD TAMIL BOOK 8.6 (page no : 45)
- தூலம்போல் வளர்கி ளைக்கு
- விழுதுகள் தூண்கள்! தூண்கள்
- ஆலினைச் சுற்றி நிற்கும்
- அருந்திறல் மறவர்! வேரோ
- வாலினைத் தரையில் வீழ்த்தி
- மண்டிய பாம்பின் கூட்டம்!
- நீலவான் மறைக்கும் ஆல்தான்
- ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- - பாரதிதாசன்
OLD TAMIL BOOK 8.6 (page no : )
OLD TAMIL BOOK 8.6 (page no : )
OLD TAMIL BOOK 8.7 (page no : 5)
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
- வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
- வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
- நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
- சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- - இராமலிங்கஅடிகளார் , திருவருட்பா
OLD TAMIL BOOK 8.7 (page no : )
OLD TAMIL BOOK 8.7 (page no : )
OLD TAMIL BOOK 8.7 (page no : )
OLD TAMIL BOOK 10.1 (page no : 1)
- மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
- கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
- பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
- கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே
- - மாணிக்கவாசகர்
- மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
- கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
- பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
- கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே
- - மாணிக்கவாசகர்
OLD TAMIL BOOK 10.1 (page no : 8)
- வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள்,
- பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
- செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
- இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே.
- - பாவேந்தர் பாரதிதாசன்
OLD TAMIL BOOK 10.1 (page no : 8)
- நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை,முப்
- பால், கடுகம், கோவை, பழமொழி, - மாமூலம்,
- இன்னிலைய காஞ்சியுடன், ஏலாதி என்பவே,
- கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
- - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
OLD TAMIL BOOK 10.1 (page no : 11)
- வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
- நுணங்கிநூல் நோக்கி நுழையா - இணங்கிய
- பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
- நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.
- கணிமேதாவியார் , ஏலாதி (59)
OLD TAMIL BOOK 10.1 (page no : 12)
- நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(று),
- ஒத்த பதிற்றுப்பத்(து) ஒங்கு பரிபாடல்,
- கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு), அகம்,புறம்என்(று)
- இத்திறத்த எட்டுத் தொகை.
- - எட்டுத்தொகை நூல்கள்
OLD TAMIL BOOK 10.1 (page no : 12)
- முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,
- பெருகு வளமதுரைக் காஞ்சி, - மருவினிய
- கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
- பாலை, கடாத்தொடும் பத்து.
- - பத்துப்பாட்டு நூல்கள்
OLD TAMIL BOOK 10.1 (page no : )